ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
x
தினத்தந்தி 14 Dec 2017 10:25 AM GMT (Updated: 14 Dec 2017 10:25 AM GMT)

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போது ராணுவ வீரர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா எல்லை பகுதியில் லான்ஸ் நயிக் பர்வீஷ் குமார் மிஸ்ரா (வயது 34) என்ற ராணுவ வீரர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிந்தார். அப்போது திடீரென தான் வைத்து இருந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தலையில் 2 தோட்டாக்கள் இருந்தாக ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

லான்ஸ் நயிக் பர்வீஷ் குமார் மிஸ்ராவின் குடும்பத்தினர் குஞ்சாவானி ராணுவ குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.  அவர் ஏன் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என விவரம் உடனடியாக தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு  துணை ஆணையர் சுரிந்தர் சௌத்ரி விரைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story