ஜம்மு காஷ்மீர்: புல்வமா மாவட்டத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதி உடல் கண்டெடுப்பு
ஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதி உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்,
தெற்கு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதியின் உடலை பாதுகாப்பு படையினர் கண்டெடுத்தனர். இச்சம்பவம் பற்றி பாதுகாப்பு படை தரப்பில் கூறப்பட்டதாவது:- ”புல்வமா மாவட்டத்தில் உள்ள டிரால் பகுதியில் கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட போது, பயங்கரவாதி ஒருவரின் உடல் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
வெளிநாட்டைச்சேர்ந்த பயங்கரவாதி, பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தைச்சேர்ந்தவன் என்றும் மறைவிடத்தில் வெடிபொருட்களை தயார் செய்து கொண்டு இருந்த போது, ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி பயங்கரவாதி இறந்துள்ளான்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story