ராகுல் காந்தி தலைமையின் கீழ் காங்கிரஸ் புதிய உயரத்தை எட்டும்-மன்மோகன் சிங் புகழாரம்
ராகுல் காந்தி தலைமையின் கீழ் காங்கிரஸ் புதிய உயரத்தை எட்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.
புதுடெல்லி,
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ராகுல் பதவியேற்பு விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:
இது காங்கிரஸ் கட்சிக்கு தனித்துவமிக்க நாள். சோனியா காந்தி கடந்த 19 வருடங்களாக சக்தி வாய்ந்த தலைவராக திகழ்ந்தார். கட்சியை சிறப்பாக வழி நடத்தினார். காங்கிரஸ் ஆட்சியில் பல சமூக நலத்திட்டங்கள் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது.
ராகுல் காந்தி தலைமையின் கீழ் காங்கிரஸ் புதிய உயரத்தை எட்டும். சோனியா காந்தி தலைமையின் கீழ் பிரதமராக இருந்த 10 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி விகிதம் 7.96% ஆக இருந்தது.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story