5 நட்சத்திர ஓட்டலில் பாலிவுட் நடிகைகள் கைது


5  நட்சத்திர ஓட்டலில் பாலிவுட் நடிகைகள் கைது
x
தினத்தந்தி 18 Dec 2017 6:00 AM GMT (Updated: 18 Dec 2017 6:06 AM GMT)

ஐதராபாத்தில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் போலீஸ் நடத்திய சோதனையில் மும்பையைச் சேர்ந்த இரண்டு பாலிவுட் நடிகைகள் மற்றும் ஒரு டிவி நடிகையை கைது செய்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்த மும்பையைச் சேர்ந்த இரண்டு பாலிவுட் நடிகைகள் மற்றும் ஒரு டிவி நடிகையை கைது செய்துள்ளனர்.

ஆனால் அந்த பாலிவுட் நடிகைகளின் பெயரோ, புகைப்படமோ இதுவரை வெளியிடப்படவில்லை. அது பற்றி விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ரிச்சா சக்சேனா என்ற நடிகை என்பது மட்டும் தெரியவந்துள்ளது.

ரிச்சா சக்சேனா 'ஜூன் 1:43' எனும் தெலுங்குப் படத்தில் நடித்திருக்கிறார். இவர் போலீசாரிடம் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் கடந்த திங்கட்கிழமை மும்பையில் இருந்து ஐதராபாத் வந்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நடிகைகளோடு இரண்டு புரோக்கர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டு  உள்ளனர். ஒருவர் பாலிவுட், தெலுங்கு மற்றும் தமிழ் படங்களுக்கு  துணை நடிகர் ஏஜெண்ட்   மோனிஷ் கடாகியா, மற்றும்  டி.வெங்கட்ராவ் ஆகியோர் ஆவர். அவர்களிடம் இருது ரூ. 55 ஆயிரம் மற்றும் 3 மொபைல் போன்கள் கைபற்றப்பட்டது.

5 நட்சத்திர  ஓட்டலின் மேனேஜரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடமிருந்த பணம், நகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story