10 வகுப்பு படித்த 15 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை


10 வகுப்பு படித்த  15 வயது சிறுமி கூட்டு பாலியல்  பலாத்காரம் செய்து கொலை
x
தினத்தந்தி 15 Jan 2018 6:24 AM GMT (Updated: 15 Jan 2018 6:24 AM GMT)

அரியானாவில் 10 வகுப்பு படித்த 15 வயது சிறுமி கூட்டு பாலியல், பலாத்காரம் செய்யபட்டு கொலை செய்யப்பட்டார்.





சண்டிகர்

அரியானா மாநிலம்  குருஷேத்ரா  ஜான்சா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணவில்லை.இவர் 10 ம் வகுப்பு படித்து வந்தார். வீட்டில் டியூசன் செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில்  சிறுமியின் உடல் சிதைந்த நிலையில் கடந்த சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.  அவர் உடல் முழுவதும் காயங்கள் இருந்தது. அவரை 3 அல்லது 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்து இருக்கலாம் என கூறப்பட்டது.

சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யபட்டது. பிரேத பரிசோதனைச் எய்த டாக்டர் எஸ்.கே. தத்தர்வால் கூறியதாவது:-

சிறுமியின் மர்ம  பாகங்கள் சிதைக்கபட்டு உள்ளன. மற்றும் நிறைய உள் காயங்கள் இருந்தன.ஒரு கடினமான மற்றும் கடினமான பொருள் ஒன்று  உள்ளே செருகப்பட்டு உள்லது. என கூறினார்.

அரியானா முதல்வர் மனோகர் லால் கத்தார்  இந்த வழக்கில் ஒரு நபர்  அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது போல் டெல்லி அருகே பரிதாபாத்தில் 22 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்டு ஓடும் காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் ஓடும் வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்டு உள்ளார். அவர் மருத்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story