வேலைவாய்ப்பை உருவாக்கவும், பலாத்காரத்தை நிறுத்தவும் என்ன திட்டம்? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி


வேலைவாய்ப்பை உருவாக்கவும், பலாத்காரத்தை நிறுத்தவும் என்ன திட்டம்? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி
x
தினத்தந்தி 19 Jan 2018 12:55 PM GMT (Updated: 19 Jan 2018 12:54 PM GMT)

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க என்ன திட்டம் உள்ளது என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். #RahulGandhi #PMModi



புதுடெல்லி,


ஜனவரி 28 -ம் தேதி பிரதமர் மோடி வானொலியில் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார், இதற்காக மக்களிடம் தங்களின் கருத்துக்களை பிரதமர் மோடி கேட்டு உள்ளார். இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கேள்விகளை எழுப்பிஉள்ளார். இதுதொடர்பாக ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், “பிரதமர் மோடி அவர்களே, மாதாந்திர வானொலி பேச்சுக்காக நீங்கள் எங்களிடம் கருத்துக்களை கேட்டு வருகிறீர்கள், நீங்கள் எங்களிடம் சொல்லுங்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும், டோக்லாமில் இருந்து சீனாவை வெளியேறவும், அரியானாவில் பாலியல் பலாத்காரத்தை தடுக்கவும் உங்களிடம் என்ன திட்டம் உள்ளது என்று,” என கேள்வியை எழுப்பிஉள்ளார். 

அரியானாவில் தொடர் பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக அம்மாநில அரசு கடும் விமர்சனத்தின் கீழ் உள்ளது. இந்நிலையில் அதனை குறிப்பிட்டும் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கேள்வியை எழுப்பி உள்ளார். அரியானா மாநில முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் பேசுகையில் பாலியல் பலாத்கார சம்பவங்களை அரசியல் ஆக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டு இருந்தார். 


Next Story