ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்களின் 3 கோரிக்கைகள்


ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்களின் 3 கோரிக்கைகள்
x
தினத்தந்தி 18 Jan 2017 4:42 AM GMT (Updated: 18 Jan 2017 4:42 AM GMT)

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் இளைஞர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட அரசிடம் மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

சென்னை,

ஜல்லிக்கட்டுக்காக ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போராடி வருகின்றனர். சென்னை மெரீனாவிலும் விடிய விடிய இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், மபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில், போராட்டத்தை கைவிட வேண்டும் எனில் 3 முக்கிய கோரிக்கைகளை இளைஞர்கள் முன்வைத்துள்ளனர்.

*ஜல்லிக்கட்டு நடத்த தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் 

*காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்க சட்ட திருத்தம்கொண்டு வர வேண்டும்.

*ஜல்லிக்கட்டு நடத்த அவசரச்சட்டம் இயற்ற தமிழக எம்.பிக்கள் பிரதமரிடம் நேரில் வலியுறுத்த வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

Next Story