மதுரையில் திரண்ட 15 ஆயிரம் மாணவ-மாணவிகள் தமுக்கம் சாலை குலுங்கியது


மதுரையில் திரண்ட 15 ஆயிரம் மாணவ-மாணவிகள் தமுக்கம் சாலை குலுங்கியது
x
தினத்தந்தி 19 Jan 2017 8:00 AM GMT (Updated: 19 Jan 2017 8:00 AM GMT)

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மதுரை தமுக்கம் அருகில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் குவிந்தனர்.இதனால் அந்த சாலை குலுங்கியது

மதுரை,

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக் கட்டுக்கு உச்சநீதிமன்றம்  விதித்த தடையால் கடந்த 2  வருடங்களாக நடைபெற வில்லை.
இந்தாண்டாவது நடத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கட்சிகள், அமைப்பினர் வலியுறுத்தி வந்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ சமுதாய மும், இளைஞர்களும்,  பொதுமக்களும் பொங்கி எழுந்தார்க்ள. ஜல்லிக் கட்டுக்கான தடையை நீக்கும் வரை போராடுவோம் என கூறி தமிழகமெங்கும் போராட்டத்தில் குதித்தனர். இன்று 4-வது நாளாக போராட்டம் நீடித்தது.

மதுரை மாவட்டத்தில் பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம், மேலூர் உள்பட பல பகுதிகளில் நடைபெற்று வந்த போராட் டம் மதுரை நகரிலும் வெடித்தது.
மதுரை பகுதியில் உள்ள பல்வேறு கல்லூரி மாண வர்கள் நேற்று  ஆங்காங்கே திரண்டு பேரணியாக தமுக்கம் மைதானத் திற்கு வந்தனர். அங்கு தமிழன்னை சிலை முன்பு அமர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். நேரம் ஆக ஆக மாணவர்களும், இளை ஞர்களும் பொதுமக்களும் சாரை சாரையாக வந்ததால் தமுக்கம் முன்புள்ள பகுதி மக்கள் கூட்டத்தால் அலை மோதியது. இதனால் போக்குவரத்து  பாதிக்கப் பட்டது. பின்னர் வேறு வழி யாக மாற்றி விடப்பட்டன.

இந்த போராட்டம் விடிய, விடிய  நடந்தது. பகலில் வெயிலையும், இரவில் பனியையும் பொருட் படுத்தாமல் மாணவ -மாணவிகள், இளைஞர்கள் ஈடுபட்டது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், காபி, டீ, பிஸ்கட் போன்ற உணவு பொருட்களை கொடுத்து உதவியதோடு போராட் டத்தை  ஊக்கப்படுத்தினர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆத ரவு தெரிவித்து மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவ -மாணவிகள் இன்று காலை  8 மணி முதல் சாரை சாரையாக தமுக்கம்  அருகில் ஒன்று திரண்டனர்.

நேரம் செல்ல....செல்ல... மாணவ-மாணவிகளின் வருகை அதிகரித்தது. இத னால் தமுக்கம் முன்புள்ள சாலை குலுங்கியது. எங்கு பார்த்தாலும் மாணவ- மாணவிகளே காணப்பட் டனர். அவர்கள் ஜல்லிக் கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும். பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பியபடியே இருந்தனர். இந்த போராட் டத்தில் சுமார் 15 ஆயிரத்துக் கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண் டனர்.

இந்த போராட்டத்தில்  மதுரை மட்டும் அல்ல வெளியூர் மாணவர்களும் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பலான வர்கள் கருப்பு சட்டை அணிந்தும்,  கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.

இந்த நிலையில் மாணவர்களின் போராட் டத்திற்கு ஆதரவு தெரிவித்து  வங்கி மற்றும்  நிதி நிறுவனம், கார் ஷோரூம் ஊழியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மதுரை ரெயில் நிலையம் கிழக்கு வாயில் எதிரே உள்ள மெயின்ரோட்டில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story