டெல்லியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு


டெல்லியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு
x
தினத்தந்தி 19 Jan 2017 9:30 AM GMT (Updated: 19 Jan 2017 9:30 AM GMT)

புதுடெல்லியில் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்தார். அப்போது ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

புதுடெல்லி

புதுடெல்லியில் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை  மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்தார். அப்போது ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்புக்கு பின் பொன்.ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். பிரதமரிடம் பேசிய பிரச்சனைகள் குறித்து விவாதித்தோம்.தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பதாக பிரதமர் உறுதியளித்திருப்பது நூற்றுக்கு நூறு உண்மையானது. தமிழக அரசின் அறிக்கைக்கு பிறகே வறட்சி நிவாரணம் குறித்து அறிவிக்கப்படும் என கூறினார்.

Next Story