பிரதம அலுவலகத்துக்கு மிஸ்டுகால் கொடுத்து மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம்


பிரதம அலுவலகத்துக்கு மிஸ்டுகால் கொடுத்து மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 Jan 2017 1:18 PM GMT (Updated: 19 Jan 2017 1:18 PM GMT)

பிரதம அலுவலகத்துக்கு மிஸ்டுகால் கொடுத்து மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.


திண்டுக்கல், 

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தியும், பீட்டா அமைப்பை இந்தியாவில் தடை செய்ய கோரியும் தமிழகம் முழுவதும் இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலும் இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகிறார்கள், இரவும் போராட்டம் நீடித்து வருகிறது. 

திண்டுக்கல் எம்.ஜி.ஆர். சிலை அருகே போராட்டம் நடத்திய இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பிரதம அலுவலகத்திற்கு மிஸ்டுகால் கொடுத்து போராட்டம் நடத்தினர். 


Next Story