தி.மு.க. எம்.எல்.ஏ. பேச்சு: சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் கடும் கோபம்
தமிழக சட்டசபையில் சபாநாயகருக்கு உதவும் வகையில் சட்டசபை செயலாளர் செயல்பட்டு வருவது வழக்கம்.
சென்னை,
அந்த வகையில் நேற்று முக்கியமான கட்டத்தில் சபாநாயகர் ப.தனபாலுக்கு செயலாளர் ஜமாலுதீன் தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று சில யோசனைகளை கூறினார்.
இதை தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் வன்மையாக கண்டித்தார். அவரது பேச்சு ஜமாலுதீனை கடுமையாக கோபம் கொள்ள செய்தது. ஒரு கட்டத்தில் ஜமாலுதீன் சில வார்த்தைகள் கூறி அவரை கண்டித்தார். எம்.எல்.ஏ. ஒருவரை சட்டசபை செயலாளர் கண்டிப்பது அரிதான நிகழ்வாகும்.
அதை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், ‘‘சபாநாயகர் முடிவெடுக்க சில நேரம் செயலாளர் உறுதுணையாக இருக்கலாம். அதற்கான குறிப்புகளை எடுத்துச்சொல்லலாம். ஆனால் கெட்டுப்போவதற்கு வழி சொல்லக்கூடாது’ என்றார்.
Next Story