கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடியுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
கோவை விமான நிலையத்தில் பிரதமர் மோடியுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 15 நிமிடம் சந்தித்து பேசினார்.
கோவை
பிரதமர் மோடி வருகை
கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த ஆதியோகி சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி தனி விமானம் மூலம் நேற்று மாலை 5.25 மணிக்கு கோவை வந்தார். பின்னர் அவர் கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் 5.55 மணிக்கு ஈஷா யோகா மையம் புறப்பட்டு சென்றார். 6.10 மணிக்கு ஈஷா யோகா மையத்துக்கு சென்றடைந்த பிரதமர், சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் இரவு 8 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டரில் கோவை திரும்பினார். பின்னர் அவர் இரவு 8.25 மணிக்கு கோவை விமான நிலையத்துக்கு வந்தடைந்தார்.
மோடியுடன் முதல்-அமைச்சர் சந்திப்பு
பின்பு பிரதமர் கோவை விமான நிலையத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அப்போது தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இரவு 8.45 மணி முதல் 9 மணி வரை 15 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பு முடிந்ததும் பிரதமர் மோடி இரவு 9.25 மணிக்கு தனி விமானம் மூலம் கோவையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.
Next Story