ஈஷா மைய நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக மூத்த தலைவர் அத்வானி கோவை வந்தார்
கோவை ஈஷா மைய நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக மூத்த தலைவர் அத்வானி கோவை வந்துள்ளார்.
கோவை,
கோவை ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயர ஆதியோகி சிலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இந்நிலையில் ஈஷா மைய நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக மூத்த தலைவர் அத்வானி அவரது மகள் பிரதீபா உடன் கோவை வந்துள்ளார். அங்கு நடக்கும் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ஈஷா யோகா மையத்தில் 2 நாட்கள் தங்கி இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திங்கள் கிழமை மாலை 6 அல்லது 7 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story