பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 20 போலீசார், தீயணைப்பு வீரர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதல்–அமைச்சர் உத்தரவு


பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 20 போலீசார், தீயணைப்பு வீரர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதல்–அமைச்சர் உத்தரவு
x
தினத்தந்தி 25 Feb 2017 5:02 PM GMT (Updated: 25 Feb 2017 5:01 PM GMT)

முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சென்னை, 

சென்னை, காஞ்சீபுரம், விழுப்புரம், வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர் என 20 பேர் உயிர் இழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். பல்வேறு நிகழ்வுகளில் உயிர் இழந்த இந்த 20 பேரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் குடும்பங்களுக்கு முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story