முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் இருந்து நடிகர் கருணாஸ் நீக்க பட்டதாக அறிவிப்பு


முக்குலத்தோர் புலிப்படை கட்சியில்  இருந்து நடிகர் கருணாஸ் நீக்க பட்டதாக அறிவிப்பு
x
தினத்தந்தி 28 March 2017 5:31 AM GMT (Updated: 28 March 2017 5:31 AM GMT)

முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் இருந்து நடிகர் கருணாஸ் நீக்க பட்டதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.



'முக்குலத்தோர் புலிப்படை' கட்சியின் தலைவராக இருந்துவருகிறார், நடிகர் கருணாஸ். இவர், நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், திருவாடானை தொகுதியில், அ.தி.மு.க. சார்பாக இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஜெயலலிதா மறைவுக்குப்  பிறகு அ.தி.மு.க. எம்எல்ஏ கருணாஸ், சசிகலா அணியில் இருந்து வருகிறார்.

இந்தநிலையில், 'முக்குலத்தோர் புலிப்படை' கட்சியின் அனைத்து புதிய நிர்வாகிகளையும் இன்று அதிரடியாக நீக்கியுள்ளார். நிர்வாகிகளாக இருந்தவர்கள், அதிகாரபூர்வ அனுமதிக் கடிதம் இன்றிச் செயல்பட்டவர்கள் என்று கூறியுள்ள கருணாஸ், மாவட்ட, ஒன்றிய, நகர புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியில்  இருந்து நடிகர் கருணாஸ் நீக்க பட்டதாக பொதுச்செயலாளர் பாண்டித்துரை மற்றும் துணைத்தலைவர் சந்தனகுமார் கூட்டாக மதுரையில் அறிவிப்பு வெளியிட்டு உள்லனர்.

புதிய தலைவராக சந்தனகுமாரை நியமித்து செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

Next Story