அ.தி.மு.க. அம்மா கட்சி சார்பில் மே தின பொதுக்கூட்டம்: சென்னையில், மே 1–ந்தேதி எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்


அ.தி.மு.க. அம்மா கட்சி சார்பில் மே தின பொதுக்கூட்டம்:  சென்னையில், மே 1–ந்தேதி எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்
x
தினத்தந்தி 26 April 2017 5:44 PM GMT (Updated: 26 April 2017 5:43 PM GMT)

அ.தி.மு.க. அம்மா கட்சி சார்பில் சென்னையில் மே 1–ந்தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

சென்னை,

அ.தி.மு.க. அம்மா கட்சியின் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.சின்னசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

‘மே’ தின கொண்டாட்டங்கள் மூலம் தொழிலாளர்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவதோடு நின்றுவிடாமல், உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகள் உலகெங்கும் பாதுகாக்கப்படவேண்டும்.

இதன் அடிப்படையில் அ.தி.மு.க. அம்மா கட்சி சார்பில் ‘மே’ தினத்தை கொண்டாடும் வகையில், கழக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் 1.5.2017 (திங்கட்கிழமை) ‘மே தின’ விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

எடப்பாடி பழனிசாமி

சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரத்தில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள் மற்றும் அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் வருமாறு:–

தென் சென்னை தெற்கு மாவட்டம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர் பா.வளர்மதி, திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கல்வித்துறை அமைச்சர் கே.செங்கோட்டையன், காஞ்சீபுரம் கிழக்கு மாவட்டம் செய்தித்தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன், வடசென்னை தெற்கு மாவட்டம் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார்,

வடசென்னை வடக்கு மாவட்டம் வேணுகோபால் எம்.பி., அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி ம.ராசு, காஞ்சீபுரம் மேற்கு மாவட்டம் அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, தென்சென்னை வடக்கு மாவட்டம் அமைப்பு செயலாளர் கோகுல இந்திரா, திருவள்ளூர் மேற்கு மாவட்டம் அமைப்பு செயலாளர் பி.வி.ரமணா, காஞ்சீபுரம் மத்திய மாவட்டம் செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story