பல்வேறு சம்பவங்களில் உயிர் இழந்த 25 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி எடப்பாடி பழனிசாமி உத்தரவு


பல்வேறு சம்பவங்களில் உயிர் இழந்த 25 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி எடப்பாடி பழனிசாமி உத்தரவு
x
தினத்தந்தி 28 April 2017 5:45 PM GMT (Updated: 28 April 2017 4:31 PM GMT)

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

சென்னை,

கடலூர், நாமக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை உள்பட பல மாவட்டங்களில், பல்வேறு நிகழ்வுகளில் 25 காவலர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

உயிர் இழந்த இந்த 25 காவலர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் குடும்பங்களுக்கு முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story