தனியார் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் இன்று முதல் காலவரம்பற்ற வேலை நிறுத்தம்


தனியார் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் இன்று முதல் காலவரம்பற்ற வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 28 May 2017 3:02 AM GMT (Updated: 28 May 2017 3:01 AM GMT)

தனியார் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் இன்று முதல் காலவரம்பற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை,

மக்களின் குடிநீர் தேவைகளை தீர்ப்பதில் தனியார் குடிநீர் கேன்கள் முக்கிய பங்குவகிக்கின்றன. குடிநீர் கேன்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பில் 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜி.எஸ்.டியில் 18 சதவீத வரி விதிக்கப்பட்டதை கண்டித்து தனியார் கேன் உற்பத்தியாளர்கள் இன்று முதல் காலவரம்பற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள உற்பத்தியாளர்கள் இன்று மாலை முதல் போராட்டத்தை துவங்க இருப்பதாக  செய்திகள் வெளியாகியுள்ளன. தனியார்குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ள போராட்டத்தால் சென்னையில் குடிநீர் கேனுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Next Story