ஜூன் 3ம் தேதி தொண்டர்கள் அனைவரும் சென்னையில் திரள வேண்டும் தொண்டர்களுக்கு- ஸ்டாலின் கடிதம்


ஜூன் 3ம் தேதி தொண்டர்கள் அனைவரும் சென்னையில் திரள வேண்டும் தொண்டர்களுக்கு- ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 28 May 2017 8:07 AM GMT (Updated: 28 May 2017 8:06 AM GMT)

ஜூன் 3-ம் தேதி தொண்டர்கள் அனைவரும் சென்னையில் திரள வேண்டும் -என்று தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் அடியெடுத்த வைத்து 60 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னையில் வைர விழா கொண்டாடப்படுகிறது, அவரது அவரது 94வது பிறந்தநாளான ஜூன் 3ம்தேதி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் சிறப்பான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த விழாவில் லாலுபிரசாத் யாதவ், ராகுல் காந்தி, நித்திஷ் குமார், டி.ராஜா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழா தொடர்பாக தொண்டர்களுக்கு செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளையும், வைர விழாவையும் இந்திய அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் விழாவாக்க வேண்டும். திமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக தலைவர் கருணாநிதியின் உறுதிமிக்க நிலைப்பாடு. ஜூன் 3ம் தேதி தொண்டர்கள் அனைவரும் சென்னையில் திரள வேண்டும். கருணாநிதியின் பிறந்தநாள் விழா, வைரவிழா ஆகியவற்றை இந்திய அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் விழாவாக்கும் வகையில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Next Story