தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்து இலங்கை கடற்படை அட்டூழ்யம்


தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்து இலங்கை கடற்படை அட்டூழ்யம்
x
தினத்தந்தி 24 Jun 2017 6:08 AM GMT (Updated: 24 Jun 2017 6:07 AM GMT)

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேரை சிறை பிடித்த இலங்கை கடற்படை.

நாகப்பட்டினம்,

இலங்கைக்கு சொந்தமான கடல் பகுதியில் அத்துமீறி மீன் பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த 8 மீனவர்களை சிறை பிடித்தாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.

வங்காள விரிகுடா கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் இலங்கைக்கு சொந்தமான கடல் பரப்பில் நுழைந்ததால் பருத்தித்துறை அருகே மீனவர்களை கைது செய்து அவர்கள் பயன்படுத்திய படகை கைபற்றியதாக இலங்கை தெரிவித்தது.

கடந்த ஜுன் 22ஆம் தேதி தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story