அமைச்சர் சம்பத்துக்கு எதிராக 4 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி சட்டசபையில் பேச்சை புறக்கணித்தனர்
அமைச்சர் சம்பத்துக்கு எதிராக அவரது மாவட்டத்தை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி சட்டசபையில் பேச்சை புறக்கணித்தனர்
சென்னை
சட்டசபையில் தொழில் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது வணிக வரித்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் பதில் அளித்து பேசினார். அவரது உரையை அவரது கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பண்ருட்டி சத்யா, சிதம்பரம் பாண்டியன், விருத்தாசலம் கலைச் செல்வன், காட்டுமன்னார் கோவில் முருகுமாறன் ஆகிய 4 பேரும் புறக்கணித்தனர். அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சபையை விட்டு எழுந்து சென்று விட்டனர்.
இவர்கள் கடலூர் மாவட்ட நிகழ்ச்சிகளில் அமைச்சர் சம்பத்தை புறக்கணித்து வருகின்றனர். இப்போது சட்டசபையிலும் அவரை புறக்கணித்துள்ளனர்.
சட்டசபையில் தொழில் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது வணிக வரித்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் பதில் அளித்து பேசினார். அவரது உரையை அவரது கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பண்ருட்டி சத்யா, சிதம்பரம் பாண்டியன், விருத்தாசலம் கலைச் செல்வன், காட்டுமன்னார் கோவில் முருகுமாறன் ஆகிய 4 பேரும் புறக்கணித்தனர். அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சபையை விட்டு எழுந்து சென்று விட்டனர்.
இவர்கள் கடலூர் மாவட்ட நிகழ்ச்சிகளில் அமைச்சர் சம்பத்தை புறக்கணித்து வருகின்றனர். இப்போது சட்டசபையிலும் அவரை புறக்கணித்துள்ளனர்.
Related Tags :
Next Story