ஜனாதிபதி தேர்தல்: மீராகுமாருக்கு தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ ஆதரவு


ஜனாதிபதி தேர்தல்: மீராகுமாருக்கு தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ ஆதரவு
x
தினத்தந்தி 24 Jun 2017 7:41 AM GMT (Updated: 24 Jun 2017 7:41 AM GMT)

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீராகுமாருக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதையொட்டி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ராம்நாத்கோவிந்தும் எதிர்க்கட்சிகளின் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் நிறுத்தப்பட்டுள்ளனர். 

ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான மீராகுமாருக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக மனித நேய மக்கள் கட்சியின் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். தலித் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்துக்கொண்டிருப்பதால் மீராகுமாருக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.  

ஜனாதிபதி தேர்தலில் அதிமுக அணிகள் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி எதிர்க்கட்சிகளின் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

Next Story