அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு வைகைசெல்வன் பேட்டி


அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு வைகைசெல்வன் பேட்டி
x
தினத்தந்தி 27 Jun 2017 11:45 PM GMT (Updated: 27 Jun 2017 7:06 PM GMT)

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்டப்படி வழக்கு தொடுப்பேன் என்று வைகைசெல்வன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி - அ.தி.மு.க. (அம்மா) செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரையொருவர் வார்த்தையால் தாக்கி பேசி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், வைகைசெல்வனை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலளித்து அ.தி.மு.க. (அம்மா) செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன் கூறியதாவது:-

நான் அமைச்சராக இருந்த சமயத்தில் என் பதவி எப்படி பறிபோனது? என்று தரம் தாழ்ந்த வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது பேச்சினை முன் வைத்திருப்பதின் மூலம், என் பொது வாழ்க்கையில் மிகுந்த களங்கம் கற்பிக்க முயற்சித்து இருக்கிறார். இதற்கு சட்டரீதியாக நான் நடவடிக்கை எடுப்பேன். சட்டப்படி அவர் மீது வழக்கு தொடுப்பேன். முதல்- அமைச்சர் கவனத்துக்கு எடுத்து சென்று, அவர் மீதான சட்டரீதியான நடவடிக்கைக்கு ஆதரவு கோருவேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story