எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு அணிகள் இணைந்தது 4.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு
எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம் சந்தித்தனர் இதன் மூலம் இரு அணிகளும் இணைந்தன 4.30 மணிக்கு புதிய அமைச்ச்ர்கள் பதவி ஏற்கிறார்கள்.
சென்னை
அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைவதன் இறுதிக் கட்டம் நெருங்கியுள்ளது. இந்த நிலையில் பொதுச்செயலாளர் சசிகலா நீக்கம் குறித்த அறிவிப்புக்குப் பிறகே தலைமைக் கழகம் வருவதாக ஓபிஎஸ் தரப்பு நிபந்தனை எனத் தகவல் வெளியானது.
இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்க, எடப்பாடி பழனிசாமி தரப்பில் தயக்கம் காட்டுவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நினைப்பதால், இந்த நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
சசிகலாவை நீக்குவது தொடர்பாக நேற்றே எடப்பாடி பழனிசாமி அணிதரப்பில் உறுதி அளிக்கப்பட்டு இருந்ததாகவும். ஆனால் இதுவரை அது நிறைவேற்றபட்டாததால் இணைப்பில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுசெயலாளராக தேர்ந்து எடுக்கபட்ட சசிகலா செயல்பட முடியாத நிலையில் சிறையில் இருப்பதால் கட்சியை வழிநடத்த ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு குழுவை நியமிக்க முடிவு செய்யபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆலோசனைக்கு பிறகு மூத்த அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீசெல்வம் வீட்டிற்கு வந்து ஆலோசனை நடத்தினர்.
இதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க தலைமை அலுவலகம் வந்தார். அதனை தொடர்ந்து ஒ.பிஎஸ் அணியினர் தலைமை அலுவலகம் வந்தனர். தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க தலைமை அலுவலகம் வந்தார். 6 மாதத்திற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க தலைமை அலுவலகம் வந்துள்ளார்.
இந்த நிலையில் சென்னை வந்த கவர்னர் வித்யாசாகர் ராவை தலைமை செயலாளர் கிரிஜாவைத்தநாதன் சந்தித்தார்.
புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைவதன் இறுதிக் கட்டம் நெருங்கியுள்ளது. இந்த நிலையில் பொதுச்செயலாளர் சசிகலா நீக்கம் குறித்த அறிவிப்புக்குப் பிறகே தலைமைக் கழகம் வருவதாக ஓபிஎஸ் தரப்பு நிபந்தனை எனத் தகவல் வெளியானது.
இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்க, எடப்பாடி பழனிசாமி தரப்பில் தயக்கம் காட்டுவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நினைப்பதால், இந்த நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
சசிகலாவை நீக்குவது தொடர்பாக நேற்றே எடப்பாடி பழனிசாமி அணிதரப்பில் உறுதி அளிக்கப்பட்டு இருந்ததாகவும். ஆனால் இதுவரை அது நிறைவேற்றபட்டாததால் இணைப்பில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுசெயலாளராக தேர்ந்து எடுக்கபட்ட சசிகலா செயல்பட முடியாத நிலையில் சிறையில் இருப்பதால் கட்சியை வழிநடத்த ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு குழுவை நியமிக்க முடிவு செய்யபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆலோசனைக்கு பிறகு மூத்த அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீசெல்வம் வீட்டிற்கு வந்து ஆலோசனை நடத்தினர்.
இதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க தலைமை அலுவலகம் வந்தார். அதனை தொடர்ந்து ஒ.பிஎஸ் அணியினர் தலைமை அலுவலகம் வந்தனர். தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க தலைமை அலுவலகம் வந்தார். 6 மாதத்திற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க தலைமை அலுவலகம் வந்துள்ளார்.
இந்த நிலையில் சென்னை வந்த கவர்னர் வித்யாசாகர் ராவை தலைமை செயலாளர் கிரிஜாவைத்தநாதன் சந்தித்தார்.
புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story