இன்று வேலைக்கு வரும் அரசு ஊழியர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு


இன்று வேலைக்கு வரும் அரசு ஊழியர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 21 Aug 2017 10:15 PM GMT (Updated: 21 Aug 2017 3:45 PM GMT)

அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சென்னை,

ஜாக்டோ–ஜியோ சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். அந்த வேலை நிறுத்தத்தையொட்டி அரசு தேர்வு இயக்குனரகம் மற்றும் மண்டல அலுவலகங்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே அலுவலகங்களுக்கு வருகை புரியும் பணியாளர்கள் எவரேனும் அச்சுறுத்தப்பட்டால் அதன் விவரத்தை 9444216250 என்ற செல்போனுக்கு தகவல் தெரிவிக்கலாம். எனவே பணியாளர்கள் யாரும் அச்சமில்லாமல் பணிக்கு வரலாம்.  இவ்வாறு தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.


Next Story