ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து ஆர்.பி.உதயகுமார் நீக்கம் -தினகரன்


ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து ஆர்.பி.உதயகுமார் நீக்கம் -தினகரன்
x
தினத்தந்தி 23 Aug 2017 6:07 AM GMT (Updated: 23 Aug 2017 6:07 AM GMT)

2 மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தினகரன் அறிவித்து உள்ளார்.

சென்னை

ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பிலிருந்து ஆர்.பி.உதயகுமார் விடுவிக்கப்பட்டு புதிய செயலாளராக மாரியப்பன் கென்னடி எம்.எல்.ஏ  நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக தினகரன் அறிவித்து உள்ளார்.

விருதுநகர் மாவட்ட பொருளாளர் பொறுப்பிலிருந்து அழகர்சாமி விடுவிக்கப்பட்டு உள்ளார்.

அது போல் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜன் செல்லப்பா விடுவிக்கபட்டு புதிய செயலாளராக மகேந்திரன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

அதிமுக அமைப்புச் செயலாளராக எம்எல்ஏ ரங்கசாமி நியமனம் செய்யபட்டு உள்ளார்.

சசிகலாவின் ஒப்புதலோடு கட்சி பொறுப்புகளில் இருந்து நிர்வாகிகள் நியமனம் மற்றும் நீக்கம் செய்திருப்பதாகத் தகவல் வெளியிடபட்டு உள்ளது.

Next Story