ஒரு வருடமாகவே ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமாக இருந்தது சி.ஆர். சரஸ்வதி


ஒரு வருடமாகவே ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமாக இருந்தது சி.ஆர். சரஸ்வதி
x
தினத்தந்தி 25 Sep 2017 11:15 AM GMT (Updated: 25 Sep 2017 11:15 AM GMT)

ஒரு வருடமாகவே ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமாக இருந்தது என சி.ஆர். சரஸ்வதி கூறிஉள்ளார்.



சென்னை,


தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்து 10 மாதங்கள் ஆகியும், இன்னும் அவரது மரணத்திற்கான காரணம் குறித்த மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாமலேயே இருக்கின்றன. அவரது மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கிடையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வெளியிட்ட கருத்து மீண்டும் ஜெயலலிதா மரணம் விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 இதனையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எதிர்க்கட்சிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ஜெயலலிதா அறிவுறுத்தலின் பேரில் சசிகலா எடுத்த வீடியோ எங்களிடம் உள்ளது, சிபிஐ மட்டுமல்ல, இன்டர்போல் விசாரிக்கவும் நாங்கள் தயார் என்றார். சி.ஆர். சரஸ்வதி பேசுகையில், ஒரு வருடமாகவே ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமாக இருந்தது, இறுதியாக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என குறிப்பிட்டு உள்ளார். 

Next Story