தமிழகத்தில் 15 நாட்களில் டெங்கு இல்லாத நிலை உருவாக்கப்படும்-அமைச்சர் விஜயபாஸ்கர்


தமிழகத்தில் 15 நாட்களில் டெங்கு இல்லாத நிலை உருவாக்கப்படும்-அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 18 Oct 2017 3:41 AM GMT (Updated: 18 Oct 2017 3:41 AM GMT)

தமிழகத்தில் 15 நாட்களில் டெங்கு இல்லாத நிலை உருவாக்கப்படும் என சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

திருச்சி

சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று  திருச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதன் விவரம் வருமாறு :-

காய்ச்சல் என்று தெரிந்தவுடன் அரசு மருத்துவமனையை அணுகுங்கள்.நிலவேம்பு கசாயம் குறித்து தவறான தகவல் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் .40 நொடிகளில் டெங்கு கண்டறியும் கருவிகளை கூடுதலாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொசு உற்பத்தியாகும் வகையில் இடத்தை அசுத்தமாக வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை. தமிழகத்தில் 15 நாட்களில் டெங்கு இல்லாத நிலை உருவாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story