கடலூர் அருகே கார் மரத்தில் மோதி விபத்து 7 பேர் பலி


கடலூர் அருகே  கார் மரத்தில் மோதி விபத்து 7 பேர் பலி
x
தினத்தந்தி 18 Oct 2017 4:58 AM GMT (Updated: 18 Oct 2017 4:58 AM GMT)

கடலூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் மரத்தில் மோதி விபத்து 7 பேர் பலி

கடலூர்

ராமநத்தம் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மரத்தில் கார் மோதி 7 பேர் பலியாயினர்.

சென்னையிலிருந்து திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள கேரள மாநிலம் பத்தினத்திட்டாவுக்கு 8 பேர் காரில் சென்றனர். நள்ளிரவில் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக கார் மரத்தில் மோதியது.  இச்சம்பவத்தில் 7 பேர் உடல் நசுங்கி அதே இடத்தில் பலியானார்கள் . பெண் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். அவருக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story