கமலுக்கு இன்னமும் சினிமா பார்வைதான் இருக்கிறது -தமிழிசை சவுந்தரராஜன்


கமலுக்கு இன்னமும் சினிமா பார்வைதான் இருக்கிறது -தமிழிசை சவுந்தரராஜன்
x
தினத்தந்தி 18 Oct 2017 7:12 AM GMT (Updated: 18 Oct 2017 7:12 AM GMT)

கமலுக்கு இன்னமும் சினிமா பார்வைதான் இருக்கிறது என்பதை அவரது கருத்துகள் காட்டுகின்றன் என தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார்.

சென்னை

தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. தமிழக அரசின் சுகாதாரத்துறை மூலம் இதை குறைக்க கடுமையான நடவடிக்கை எடுத்தாலும், காய்ச்சல் இன்னும் குறைந்தபாடில்லை. தினமும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டேப்போகிறது. சாதாரண காய்ச்சல் வந்தால்கூட டெங்கு காய்ச்சல் வந்துவிட்டதோ? என்ற அச்சம் வாட்டிவதைக்கிறது. டெங்கு காய்ச்சலை குணமாக்க இன்னும் திட்டவட்டமான ஒரு மருந்தை கண்டுபிடிக்கவில்லை. ஆனால், சித்த மருத்துவர்கள், Ôநிலவேம்பு குடிநீரை குடித்தால் டெங்கு காய்ச்சல் குணமாகிவிடும்Õ என்று உறுதியாக நம்புகிறார்கள். இதை தமிழக அரசும் ஏற்றுக்கொண்டு, இப்போது அனைத்து மருத்துவமனைகளிலும் நிலவேம்பு குடிநீர் வழங்கி வருகிறார்கள். அரசு மட்டுமல்லாமல், அனைத்து அரசியல் கட்சிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் நிலவேம்பு குடிநீர் வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள். 

இந்தியா முழுவதுமே தமிழகத்தின் டெங்கு காய்ச்சல் உலுக்கிவிட்டது. மத்திய அரசாங்கத்தின் கதவுகளைக்கூட இந்த தகவல்கள் தட்டிவிட்டன. அதனால்தான் பிரதமர் நரேந்திரமோடி டெல்லியிலிருந்து இந்த நோய் நிலைமையை கண்டறிய 5 மருத்துவ நிபுணர்களை தமிழ்நாட்டிற்கு அனுப்பினார். இந்த நிபுணர்கள் தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சில மாவட்டங்களுக்கும் சென்று பார்வையிட்டனர். ஓரிரு நாளில் மத்திய அரசாங்கத்திடம் அறிக்கை தர இருக்கிறார்கள். இந்த குழுவின் தலைவரான அஷ§தோஷ் பிஸ்வாஸ், Ôநிலவேம்பு குடிநீரை குடிக்கச்சொல்லி இந்த மருத்துவக்குழு பரிந்துரை செய்யாது. ஏனெனில், இது குணமாகும் என்று அறிவியல் ரீதியாக எந்த ஆய்வுகளும் இதுவரையில் தெரிவிக்கவில்லைÕ என்றும் அதிர்ச்சிகரமான ஒரு தகவலை தந்தார். 

ஆனால், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறும்போது, Ôஇந்த நிலவேம்பு குடிநீர் டெங்கு காய்ச்சலை குணமாக்குகிறது என்பது காலம்காலமாக அனுபவத்தால் அறிந்த ஒன்று. குறிப்பாக நிலவேம்பு குடிநீர் என்பது நிலவேம்பு மட்டுமல்லாமல், மேலும் 8 மூலிகைகளைக்கொண்டு, சித்த மருத்துவத்தில் தயாரிக்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட மருந்தாகும். அங்கீகரிக்கப்படாத மருந்து என்று குறிப்பிடுவது தவறான கருத்து எனகூறி உள்ளார்.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் என தனது டுவிட்டரில் சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு  விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும் என கூறி உள்ளார்.

ஆனால் இதற்கு தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை மறுப்பு தெரிவித்துள்ளார். நிலவேம்பு கசாயம் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தாது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

மேலும் அவர் கூறும் போது  கமல்ஹாசன் அனைத்தையும் சினிமாவாகவே பார்க்கிறார், எழுதிக் கொடுக்கும் வசனத்தை பேசுவது அரசியல் அல்ல. கமல் கருத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்வதில்லை. கமலுக்கு இன்னமும் சினிமா பார்வைதான் இருக்கிறது என்பதை அவரது கருத்துகள் காண்பிக்கின்றன. மு.க.ஸ்டாலின் அரசியல் சொல்லித்தர வேண்டிய நிலையில் வெங்கய்ய நாயுடு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story