தீபாவளியையொட்டி பட்டாசு வெடிப்பதால் சென்னையில் புகை மூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி


தீபாவளியையொட்டி பட்டாசு வெடிப்பதால் சென்னையில் புகை மூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 18 Oct 2017 4:10 PM GMT (Updated: 18 Oct 2017 4:10 PM GMT)

தீபாவளியையொட்டி பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவதால் சென்னையில் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.

சென்னை,

தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடிவருகின்றனர். பட்டாசு வெடிப்பதால் ஏற்பட்ட புகையால் சென்னை  நகரம் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது.

புகை மூட்டத்தால், மக்கள் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சாலையில் குறுகிய தூரம் மட்டுமே எதிரே வரும் வாகனங்கள், ஆட்கள் தெரிவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


Next Story