காதலி கொலை உடலை பீரோவில் 15 மாதங்கள் வைத்திருந்த காதலன்


காதலி கொலை உடலை பீரோவில் 15 மாதங்கள் வைத்திருந்த காதலன்
x
தினத்தந்தி 20 Feb 2017 5:25 AM GMT (Updated: 20 Feb 2017 5:53 AM GMT)

இங்கிலாந்தில் காதலியின் பிணத்தை 15 மாதங்களாக வீட்டு பீரோவில் மறைத்து வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இங்கிலாந்தின் போல்டன்  நகரில் வசித்து வருபவர் விக்டோரியா செர்ரி  (44) இவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் திடீரென காணாமல் போய் விட்டார். அவர் உறவினர்கள் போலீசிடம்  புகார் அளித்தும் விக்டோரியா பற்றிய விவரங்கள் தெரியாமலே இருந்து வந்தது.

இந்நிலையில் போன மாதம் ஒரு வீட்டில் பயங்கர துர்நாற்றம் வாடை வருவதாகவும் உடனே வருமாறும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த இடத்துக்கு சென்று பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

காரணம் அவர்கள் போன வீட்டின் பீரோவில் ஒன்றரை வருடங்கள் முன்னர் காணாமல் போன விக்டோரியாவின் உடல்  அழுகிய நிலையில் இருந்துள்ளது.

அந்த வீட்டில் இருந்த ஆண்ட்ரூ கொலின் (43) என்பவரின் காதலி தான் விக்டோரியா எனவும் அவர் தான் சடலத்தை ஒன்றரை வருடங்களாக பீரோவில் வைத்திருந்ததும் தெரியவந்தது.

ஆண்ட்ருவை வை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story