ஒபாமாவின் சுற்றுச்சூழல் கொள்கைகளை நீக்கினார் டிரம்ப்


ஒபாமாவின் சுற்றுச்சூழல் கொள்கைகளை நீக்கினார் டிரம்ப்
x
தினத்தந்தி 29 March 2017 7:35 AM GMT (Updated: 29 March 2017 7:35 AM GMT)

முன்னாள் ஒபாமாவின் சுற்றுச்சூழல் ஆணையையும், பாரிஸ் உலக சுற்றுச்சூழல் உடன்படிக்கையையும் கைவிடுவதாக அதிபர் டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தின்போது அறிவித்தார். வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக நேற்று புதிய ஆணையில் கையெழுத்திட்டார்.

வாஷிங்டன்

முன்னாள் ஒபாமாவின் சுற்றுச்சூழல் ஆணையையும், பாரிஸ் உலக சுற்றுச்சூழல் உடன்படிக்கையையும் கைவிடுவதாக அதிபர் டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தின்போது அறிவித்தார். வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக நேற்று புதிய ஆணையில் கையெழுத்திட்டார்.

டிரம்ப் கையெழுத்திட்டப் பின்னர், “ இந்த வரலாற்று ஆணையில் கையெழுத்திட்டதின் மூலம், அமெரிக்க எரிசக்தித் துறையின் மீதிருந்த தடைகளை நீக்கியுள்ளேன். அரசின் தலையீடுகளை நீக்கி, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளேன்” என்றார். அவர் மேலும் கூறுகையில், “அமெரிக்க செல்வத்தை, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வழி செய்துள்ளேன். அமெரிக்காவின் வளர்ச்சியை திருடிச் செல்ல அனுமதிக்காமல் நமது நாட்டை மறுபடியும் உயர் நிலைக்கு எடுத்துச் செல்ல உதவும் நடவடிக்கையாகும் இது” என்றார்.

வெள்ளைமாளிகை அதிகாரி ஒருவர் அதிபர் டிரம்ப் சுற்றுச்சூழலை பாதுகாப்பதும், பொருளாதாரத்தை வளர்ப்பதும் ஒன்றையொன்று சார்ந்த விஷயங்களல்ல என்று நம்புவதாக தெரிவித்தார்.”இப்புதிய ஆணை பொருளாதார வளர்ச்சியையும், வேலைவாய்ப்பையும் பாதிக்காமல் தூயக் காற்று, குடிநீரைக் காப்பாற்றுவதை உறுதி செய்யும். இந்த ஆணை புதிய எரிசக்திப் புரட்சியைக் கொண்டுவரும். அமெரிக்க மண்ணில், அமெரிக்க தொழில்நுட்பம், அமெரிக்க கட்டமைப்பினைக் கொண்டு அமெரிக்க எரிசக்தியை ஏற்றுமதி செய்ய வழிவகுக்கும். அனைத்து தயாரிப்புகளும் அமெரிக்காவிலேயே நடைபெற வேண்டும்” என்றார் டிரம்ப். 

இந்த ஆணை எதிர்ப்புக்களையும் கொண்டு வராமல் இல்லை. அமெரிக்கா முழுதும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், முக்கிய இந்திய வம்சாவளி எம் பியான ஆமி பேரா போன்றோரும் இந்த ஆணை பத்தாண்டுகளாக சுற்றுச்சூழலையும் காப்பாற்றி, வேலைவாய்ப்பையும், பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்காமலிருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பின்னால் தள்ளி விட்டதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.


Next Story