உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 27 May 2017 10:45 PM GMT (Updated: 27 May 2017 7:56 PM GMT)

* அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில், ஓடும் ரெயிலில் 2 முஸ்லிம் இளம்பெண்கள் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இனவெறி தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

* மலேசியாவில் வெவ்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக பயங்கரவாத தடுப்புப்படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

* மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் ஆதிக்கம் மிகுந்த வெரகுரூஸ் மாகாணத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 5 ஆண் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் சித்ரவதை செய்யப்பட்டதற்கான தடயங்கள் அவர்களது உடல்களில் காணப்பட்டன. இதன் பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

* இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் 2 வாலிபர்களை இங்கிலாந்து போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களையும் சேர்த்து மொத்தம் 11 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

* ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த மொசூல் நகரின் பெரும்பாலான பகுதிகளை அரசுப்படை மீட்டுவிட்ட நிலையில், எஞ்சிய பகுதிகளை மீட்பதற்கான ராணுவ நடவடிக்கை தொடங்கி உள்ளது. இதையொட்டி குறிப்பிட்ட அந்த பகுதிகளில் வாழும் பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


Next Story