பிலிப்பைன்ஸ் நாட்டில் ராணுவ வீரர்கள் 3 முறை பலாத்காரம் செய்ய அனுமதியா? அதிபரின் தமாசுக்கு கண்டனம்


பிலிப்பைன்ஸ் நாட்டில் ராணுவ வீரர்கள் 3 முறை பலாத்காரம் செய்ய அனுமதியா? அதிபரின் தமாசுக்கு கண்டனம்
x
தினத்தந்தி 28 May 2017 11:15 PM GMT (Updated: 28 May 2017 5:30 PM GMT)

பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் ஐ.எஸ். இயக்கத்தின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

மணிலா,

அவர்களை கொன்று குவிப்பதற்காக அந்த பகுதியில் ராணுவ சட்டத்தை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமல்படுத்தி, அதிபர் ரோட்ரிகோ டியுடர்டே உத்தரவிட்டார். பொதுவாக ராணுவ சட்டம் அமலில் இருக்கிறபோது, ராணுவ வீரர்கள் பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடுவதாக புகார்கள் எழுவது உண்டு.

இந்த நிலையில், ராணுவ சட்டம் அமலில் உள்ள மின்டானவ் தீவில் ராணுவ முகாம் ஒன்றில் அதிபர் ரோட்ரிகோ டியுடர்டே பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘நீங்கள் 3 முறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டால் அதை நான் அனுமதிப்பேன். அதை நானே செய்ததாக கருதிக்கொள்வேன். நான் என்னையை சிறையில் அடைத்துக்கொள்வேன்’’ என தமாஷாக குறிப்பிட்டார்.

இது சமூக வலைத்தளங்களில் பலத்த விமர்சனங்களுக்கும், கண்டனங்களுக்கும் வழிவகுத்து விட்டது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கிளிண்டனின் மகள் செல்சியா கிளிண்டன், ‘‘டியுடர்டே ஒரு கொலைகார குண்டன். அவருக்கு மனித உரிமைகள் பற்றி மரியாதை இல்லை. பாலியல் பலாத்காரம் என்பது ஒருபோதும் தமாஷ் அல்ல என்பதை சுட்டிக்காட்டுவது முக்கியம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story