பிரிட்டனில் இந்திய வம்சாவளி இஸ்லாமிய பெண் சித்தரவதை செய்யப்பட்டு கவுரவ கொலை


பிரிட்டனில் இந்திய வம்சாவளி இஸ்லாமிய பெண் சித்தரவதை செய்யப்பட்டு கவுரவ கொலை
x
தினத்தந்தி 25 July 2017 10:31 AM GMT (Updated: 25 July 2017 10:31 AM GMT)

பிரிட்டனில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இஸ்லாமிய பெண் சித்தரவதை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கவுரவ கொலை செய்யப்பட்டு உள்ளார்.

லண்டன்,

பிரிட்டனில் அரபு நாட்டை சேர்ந்த வாலிபருடன் ‘டேட்டிங்’ சென்றதற்கு 19 வயது இந்திய வம்சாவளி இஸ்லாமிய பெண் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார் என அந்நாட்டு மீடியா தகவல் வெளியிட்டு உள்ளது.

மற்றொரு பெண்ணுடன் இவரை கடத்திய கும்பல் தென்மேற்கு லண்டனின் கிங்ஸ்டன் பகுதிக்கு கொண்டு சென்று சித்தரவதை செய்து உள்ளது. இருபெண்களும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர், இந்திய வம்சாவளி இஸ்லாமிய பெண் கொல்லப்பட்டார் என கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 20 வயதாகும் மற்றொரு பெண்ணையும் கொலை செய்யும் முயற்சி நடந்து உள்ளது. அவருடைய கழுத்தை அறுக்க முயற்சி செய்யப்பட்டு உள்ளது, போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

 இந்திய வம்சாவளி பெண் கொல்லப்பட்டது தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையானது வெள்ளிக்கிழமை கொடுக்கப்பட்டு உள்ளது, அவருடைய கழுத்தை அறுத்து கொல்லப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொல்லப்பட்ட பெண் மேக்-அப் துறை தொடர்பாக படித்து வருகிறார், ஏற்கனவே ஒரு திரில்லர் படத்தில் மேக்-அப் பணியாளராக பணியாற்றி உள்ளார். இவ்வழக்கில் ஆஜரான முஜாகித் அர்ஷித் (வயது 33) மீது கொலை, பாலியல் பலாத்காரம் மற்றும் கடத்தல் ஆகிய வழக்குகளில் குற்றம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

இரண்டாவது பெண்ணையும் கடத்தியது, பாலியல் பலாத்காரம் செய்தது மற்றும் கொலை செய்ய முயற்சி செய்தது தொடர்பாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வழக்கில் முஜாகித் அர்ஷித்திற்கு உதவியாக இருந்த வின்சென்ட் தப்பூ மீதும் கடத்தல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. “கொல்லப்பட்ட பெண் லண்டனில் வசிக்கும் அரபிக் இஸ்லாமியரான ஒருவருடன் தொடர்பு கொண்டு இருந்து உள்ளார், இதனை அவரின் குடும்பத்தார் ஏற்கவில்லை. இந்திய இஸ்லாமியர் என்பதால் அவர்கள் அதனை ஏற்கவில்லை,” என வழக்கறிஞர் கூறிஉள்ளார். இதுதொடர்பாக குற்றவாளிகளை காவலில் எடுத்து போலீஸ் விசாரித்து வருகிறது.

Next Story