ஆப்கானிஸ்தானில் தலீபான் சிறையில் இருந்து 30 பேர் மீட்பு


ஆப்கானிஸ்தானில் தலீபான் சிறையில் இருந்து 30 பேர் மீட்பு
x
தினத்தந்தி 19 Nov 2017 7:27 AM GMT (Updated: 19 Nov 2017 7:27 AM GMT)

ஆப்கானிஸ்தானில் தலிபான் சிறையில் இருந்து 30 பேரை சிறப்பு படை இன்று மீட்டுள்ளது.

லஸ்கர் கா,

ஆப்கானிஸ்தானில் ஹெல்மண்ட் மாகாணத்தின் தெற்கே நவ்ஜத் மாவட்டத்தில் தலீபான் தீவிரவாதிகளின் சிறை உள்ளது. இங்கு பலர் கைதியாக அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களில் 12 வயதுக்கு உட்பட்ட 4 சிறுவர்கள் மற்றும் 2 போலீசாரும் அடங்குவர்.

அரசுக்கு உதவுவோர் அல்லது ஆப்கானிஸ்தான் ராணுவம் மற்றும் போலீசாரின் குடும்ப உறுப்பினர்கள் என 20 பேரை தலீபான் தீவிரவாதிகள் சிறை பிடித்துள்ளனர். 6 பேரிடம் அவர்கள் கைது செய்யப்பட்டதற்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிறையில் இருந்து மீட்கப்பட்டவர்கள் கொள்ளை, கடத்தல், தனிப்பட்ட மோதல்கள் மற்றும் பிற குற்றங்களுக்காக விசாரணை செய்யப்பட வேண்டிய குற்றவாளிகள் என தலீபான் அமைப்பு தெரிவித்துள்ளது.


Next Story