பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சண்டையில் பாகிஸ்தான் ராணுவத்தின் உயரதிகாரி சுட்டுக்கொலை


பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சண்டையில் பாகிஸ்தான் ராணுவத்தின் உயரதிகாரி சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 22 Nov 2017 9:23 AM GMT (Updated: 22 Nov 2017 9:23 AM GMT)

பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சண்டையின் போது பாகிஸ்தான் ராணுவத்தின் மேஜர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இஸ்லமாபாத்,

பாகிஸ்தானின் கைபர் பகதுன்க்வா மாகாணத்தில் உள்ள மாவட்டம் டேரா இஸ்மாயில் கான். இந்த மாவட்டத்தின் சில பகுதிகளில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பயங்கரவாதிகள் பல பதுங்கிடங்களை அமைத்துக்கொண்டு அங்கு தங்கியுள்ளனர். வரிஸிஸ்தானில் பழங்குடியின வாசிகளுக்கு முக்கிய பாதையாகவும் இந்த இடம் அமைந்துள்ளது. இந்த நிலையில்,  இப்பகுதியில் உள்ள பயங்கரவாதிகளை குறிவைத்து பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சண்டையின் போது, பாகிஸ்தான் ராணுவ மேஜர் இஷாக் என்பவர் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில்  உயிரிழந்தார். இந்த தகவலை பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும் இந்த சண்டையில் பயங்கரவாதிகள் தரப்பில் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. கடந்த மூன்று மாதங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது  உயிரிழந்த  மூன்றாவது ராணுவ மேஜர் இஷாக் ஆவார்

Next Story