பிரச்சினைகள் தீர வழி!


பிரச்சினைகள் தீர வழி!
x
தினத்தந்தி 15 March 2017 7:28 AM GMT (Updated: 15 March 2017 7:28 AM GMT)

வாழ்க்கையில் பிரச்சினைகள் வரலாம். ஆனால் பிரச்சினையே வாழ்க்கையாகக் கூடாது. குடும்பத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளையும் எதிர் கொள்ள பரிகாரம் உள்ளது.

தினமும் மாலை நேரம் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாம். பசுநெய் அல்லது நல்லெண் ணெய் தீபம் ஏற்றலாம். கோலம் போட்ட இடத்தின் மீது விளக்கு வைக்க வேண்டும். புள்ளிக் கோலத்திற்கு உறவுகளை இணைக்கும் ஆற்றல் உண்டு. வீட்டை வாரம் ஒரு முறையேனும் சுத்தம் செய்து, சாம்பிராணிப் புகை போடுதல் உத்தமம்.

தெய்வப் படங்களை திசை பார்த்து வைத்து வழிபட வேண்டும். கற்பக விநாயகர் படத்தை வடக்குப் பார்த்து வைத்தால் யோகம். குரு பகவான் படத்தை, நம்மைப் பார்க்கும் விதம் வைத்து வழிபட வேண்டும்.

பூரண கும்பத்தின் முகத்தில் அதிகாலையில் விழித்தல் நல்லது. லட்சுமி கடாட்சம் உருவாகும். மயில் இறகு, சங்கு போன்ற வற்றை வீட்டில் வைத்தல், தெய்வீக மூலிகைகள் துளசி, திருநீற்றுப் பச்சை, வில்வம் வைத்தல், நடையில் சங்கு பதித்தல், நிலைக் கண்ணாடியை வீட்டின் முகப்பில் வைப்பது போன்றவை திருஷ்டி தோஷம் போக்கும்.

இவ்வாறு செய்வதால் பிரச்சினை தீருமா? என்று நினைக்கக் கூடாது. வீட்டில் தெய்வ சக்தி அதிகரித்தால் பிரச்சினைகள் விலகி ஓடும்.

Next Story