பிள்ளையார் பெருமை - ஆன்மிக துளிகள்


பிள்ளையார் பெருமை - ஆன்மிக துளிகள்
x
தினத்தந்தி 14 Aug 2017 9:03 AM GMT (Updated: 14 Aug 2017 9:07 AM GMT)

ஹோமங்கள் நடைபெறும் பொழுது, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜையைத் தொடங்குவர்.

வீடுகளில் மண்ணில் பிள்ளையார் செய்து, அதில் வண்ணம் தீட்டியும் வழிபாட்டுக்கு வைத்துக்கொள்வர். வெண்கலப் பிள்ளையார், வெள்ளிப் பிள்ளையார், வெள்ளைப் பிள்ளையார், வேப்பமரப் பிள்ளையார், வெள்ளருக்குப் பிள்ளையார் என்று பலவகை பிள்ளையார்களை மக்கள் வழிபடுவது வழக்கம். எந்த வகைப் பிள்ளையாருக்கு என்ன பலன் என்பதைப் பற்றியும், முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
மஞ்சள் பிள்ளையாரை வழிபட்டால் திருமணத் தடை அகலும். வீட்டில் மங்கல ஓசை கேட்கும். மண்ணால் ஆன பிள்ளையாரை வீட்டில் வைத்து வழிபட்டால் அரச பதவி கிடைக்கும். அரசாங்க வேலை அமையும். புற்றுக்கு அருகில் இருக்கும் பிள்ளையாரை வழிபட்டால் வியாபார விருத்தி ஏற்படும். வேப்பமரத்தடியில் இருக்கும் பிள்ளையாரை வழிபட்டால் வெற்றி உண்டாகும். அரசமரத்தடியின் கீழ் இருக்கும் பிள்ளையாரை வழிபட்டால் வாரிசு உருவாகும். கண்திருஷ்டி கணபதியை இல்லத்து முகப்பில் வைத்தால் திருஷ்டி தோஷம் போக்கும்.

விநாயகருக்கு உகந்த ஆறு விரதங்கள்


விநாயகர் சதுர்த்தி விரதம், குமாரசஷ்டி விரதம், சித்திவிநாயகர் விரதம், செவ்வாய்க்கிழமை விரதம், வெள்ளிக்கிழமை விரதம், சங்கடஹர சதுர்த்தி விரதம் ஆகியவை விநாயகரை வழிபடக்கூடிய விரதங்கள் ஆகும்.
ஆவணிமாதம் விநாயகர் சதுர்த்தியில் தொடங்கி புரட்டாசி மாதம் சுக்லபட்ச சதுர்த்தி வரை விநாயகரை மனதில் நினைத்து அனுஷ்டிக்கப்படும் விரதத்திற்கு விநாயகர் சதுர்த்திவிரதம் எனப்படு கிறது. இந்த விரதத்தை மேற்கொள்வதால் வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

வலை போக்கும் கணபதி ஜாதகம்

தெய்வங்கள் எல்லாவற்றிற்கும் ஜாதகங்கள் இருக்கின்றன. அதில் கணபதி ஜாதகத்தைக் கையில் வைத்துக்கொண்டாலோ, பூஜையறையில் வைத்து வழிபட்டாலோ எண்ணிய காரியங்கள் எளிதில் கைகூடும். கணபதிக்கு அருகில் ஜாதகத்தை வைத்து கணபதி காயத்ரியைச் சொல்லி வழிபடுவது நல்லது.

Next Story