அம்மை நோய் நீக்கும் அம்பாள் கதை
நவராத்திரி காலம் மட்டுமின்றி, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி திதிகளில் அம்பாளின் கதையை வாசித்தாலும், அம்மை நோய் அண்டாது என்பது ஐதீகம்.
நவராத்திரி விரதம் பிரதமையில் தொடங்கி நவமியில் முடியும். இதில் குறிப்பாக அஷ்டமி (நவராத்திரியின் எட்டாம் நாள்), நவமி (சரஸ்வதி பூஜை நாள்) திதிகளில் அம்பாளின் கதையைக் கேட்டாலோ, படித்தாலோ அம்மை நோய் வராது என்பது நம்பிக்கை. நவராத்திரி காலம் மட்டுமின்றி, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி திதிகளில் அம்பாளின் கதையை வாசித்தாலும், அம்மை நோய் அண்டாது என்பது ஐதீகம். மேலும், அம்பிகையின் கதை கேட்பவர்களை, கிரக ஆதிக்கத்தால் ஏற்படும் தோஷங்கள் நெருங்காது. பிரிந்த உறவினர்கள், நண்பர்கள் மீண்டும் ஒன்று சேருவர். திருடர்களின் தொல்லை அகலும். நெருப்பு, தண்ணீர், ஆயுதம் போன்றவற்றால் ஏதாவது கண்டங்கள் இருந்தால் அவை அனைத்து விலகி ஓடும்.
Related Tags :
Next Story