இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாகிகள் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு


இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாகிகள் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு
x
தினத்தந்தி 19 Jan 2017 9:27 PM GMT (Updated: 19 Jan 2017 9:27 PM GMT)

லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்த கால தாமதம் செய்ததுடன், கோர்ட்டுக்கு தவறான தகவலை தெரிவித்ததற்காக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை கடந்த 2-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டை அதிரடியாக நீக்கியது.

புதுடெல்லி,

லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்த கால தாமதம் செய்ததுடன், கோர்ட்டுக்கு தவறான தகவலை தெரிவித்ததற்காக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை கடந்த 2-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டை அதிரடியாக நீக்கியது. இவர்களுக்கு பதிலாக தகுதியான நிர்வாகிகளை தேர்வு செய்து அளிக்கும் படி இரண்டு வக்கீல்களை சுப்ரீம் கோர்ட்டு கேட்டு இருந்தது. இன்று நடக்கும் விசாரணையின் போது புதிய நிர்வாகிகள் யார்? என்பதை சுப்ரீம் கோர்ட்டு இறுதி செய்து அறிவிக்கும் என்று தெரிகிறது. 

Next Story