கிரிக்கெட் சூதாட்டம்: பாகிஸ்தான் வீரர் ஜாம்ஷெட் கைது


கிரிக்கெட் சூதாட்டம்: பாகிஸ்தான் வீரர் ஜாம்ஷெட் கைது
x
தினத்தந்தி 15 Feb 2017 9:41 PM GMT (Updated: 15 Feb 2017 9:41 PM GMT)

2–வது பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடரில் விளையாடிய பாகிஸ்தான் வீரர்கள் ‌ஷர்ஜீல் கான், காலித் லத்தீப் ஆகியோர் ஊழல் தடுப்பு விதிமுறையை மீறி செயல்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் இட

லண்டன்,

2–வது பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடரில் விளையாடிய பாகிஸ்தான் வீரர்கள் ‌ஷர்ஜீல் கான், காலித் லத்தீப் ஆகியோர் ஊழல் தடுப்பு விதிமுறையை மீறி செயல்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த போட்டி தொடரில் விளையாடாத பாகிஸ்தான் முன்னாள் வீரர் நசிர் ஜாம்ஷெட் ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்ததை தொடர்ந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் நசிர் ஜாம்ஷெட் மற்றும் ஒருவரை லண்டன் போலீசார் கைது செய்தனர். நசிர் ஜாம்ஷெட்டுடன் கைது செய்யப்பட்ட நபர் யார் என்பது வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை. அவர் சூதாட்ட தரகராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் இருவரும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story