உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட்: தெற்கு மண்டல அணிக்கு முதல் வெற்றி


உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட்: தெற்கு மண்டல அணிக்கு முதல் வெற்றி
x
தினத்தந்தி 16 Feb 2017 8:46 PM GMT (Updated: 16 Feb 2017 8:46 PM GMT)

சையது முஷ்தாக் அலி கோப்பைக்கான மண்டலங்களுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது.

மும்பை,

சையது முஷ்தாக் அலி கோப்பைக்கான மண்டலங்களுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் பார்த்தீவ் பட்டேல் தலைமையிலான மேற்கு மண்டல அணி, விஜய் சங்கர் தலைமையிலான தெற்கு மண்டல அணியை எதிர்கொண்டது. முதலில் ஆடிய மேற்கு மண்டல அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய தெற்கு மண்டல அணி 17.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 70 ரன்னும், விஷ்ணு வினோத் 36 ரன்னும் எடுத்தனர். 3–வது ஆட்டத்தில் ஆடிய தெற்கு ரெயில்வே அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். மேற்கு மண்டல அணி சந்தித்த 2–வது தோல்வி இது.

மற்றொரு லீக் ஆட்டத்தில் மனோஜ் திவாரி தலைமையிலான கிழக்கு மண்டல அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வடக்கு மண்டல அணியை வீழ்த்தி தொடர்ச்சியாக 3–வது வெற்றியை ருசித்தது. 4–வது ஆட்டத்தில் ஆடிய வடக்கு மண்டல அணி சந்தித்த 3–வது தோல்வி இதுவாகும்.


Next Story