மும்பையில் ரயில்நிலைய பிளாட்பார்ம் வரை காரை ஓட்டி வந்த கிரிக்கெட் வீரர் கைது
மும்பையில் ரயில் நிலைய பிளாட்பார்ம் வரை காரை ஓட்டி வந்த முன்னாள் கிரிக்கெட் வீரரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பையில் உள்ள அந்தேரி ரயில் நிலையத்தில் இன்று காலை 8 மணியளவில், பிளாட்பார்ம் வரை வந்த காரால் பயணிகளிடையே பீதி ஏற்பட்டது. இதையடுத்து, விரைந்து வந்த ரயில்வே போலீசார் காரில் வந்த நபரை கைது செய்தனர்.
விசாரணையில், ஹர்மீத் சிங் (வயது 28) என்ற அவர் 19-வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள விளையாடியவர் என்பது தெரியவந்தது. தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் தவறுதலாக வந்ததாக கூறப்படுகிறது. ஹர்மீத் சிங் ராஞ்சி போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.
இந்த விவகாரத்தின் பின்னணியில் வேறு எந்த நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை என்று தெரிவித்த போலீசார் ரயில்வே சட்ட விதிகளின் படி வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் குடிபோதையில் உள்ளாரா? என்பது குறித்து கண்டறியவும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
Next Story