‘புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனி நீக்கப்பட்டது மகிழ்ச்சி’ ஷேவாக் சொல்கிறார்


‘புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனி நீக்கப்பட்டது மகிழ்ச்சி’ ஷேவாக் சொல்கிறார்
x
தினத்தந்தி 24 Feb 2017 12:00 AM GMT (Updated: 23 Feb 2017 7:30 PM GMT)

இந்திய ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து சமீபத்தில் விலகிய கேப்டன் டோனியை, 10–வது ஐ.பி.எல்.

புதுடெல்லி,

போட்டிக்கான ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து அந்த அணி நிர்வாகம் அதிரடியாக நீக்கியது. இந்த நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரருமான ஷேவாக் அளித்த பேட்டியில், ‘புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி நீக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில் இதன் மூலம் இந்த சீசனில் புனே அணியை எங்களது பஞ்சாப் அணியால் வீழ்த்த முடியும். டோனி நீக்கம் அந்த அணியின் உள்விவகாரம் என்றாலும், இந்திய கிரிக்கெட் அணி கண்ட மிகச்சிறந்த கேப்டன்களில் டோனியும் ஒருவர்’ என்று தெரிவித்துள்ளார்.


Next Story