தியோதர் கோப்பை கிரிக்கெட்: இந்திய புளு அணிக்கு ரோகித் சர்மா கேப்டன்


தியோதர் கோப்பை கிரிக்கெட்: இந்திய புளு அணிக்கு ரோகித் சர்மா கேப்டன்
x
தினத்தந்தி 21 March 2017 9:45 PM GMT (Updated: 21 March 2017 8:11 PM GMT)

தியோதர் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய புளு அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை

தியோதர் கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி தொடர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வருகிற 25-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா புளு, இந்தியா ரெட் ஆகிய அணிகளுடன், 3-வது அணியாக விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற விஜய் சங்கர் தலைமையிலான தமிழக அணி கலந்து கொள்கிறது.

இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் ஆட்டம் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

ரோகித் சர்மா கேப்டன்

தியோதர் கோப்பை போட்டி தொடருக்கான இந்திய புளு மற்றும் இந்திய ரெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து 4 மாதங்களுக்கு பிறகு மும்பை அணிக்காக விஜய் ஹசாரே போட்டியில் ஆடி 4, 16 ரன்கள் எடுத்து சொதப்பிய இந்திய அணி வீரர் ரோகித் சர்மா இந்திய புளு அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரெட் அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேல் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

இந்தியா புளு: ரோகித் சர்மா (கேப்டன்), மன்தீப்சிங், ஸ்ரேயாஸ் அய்யர், அம்பத்தி ராயுடு, மனோஜ்திவாரி, ரிஷாப் பான்ட் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, ஹர்பஜன் சிங், குணால் பாண்ட்யா, ஷபாஸ் நதீம், சித்தார்த் கவுல், ஷர்துல் தாகூர், பாசித் கிருஷ்ணா, பங்கஜ் ராவ்.

பார்த்தீவ் பட்டேல்

இந்தியா ரெட்: பார்த்தீவ் பட்டேல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஷிகர் தவான், மனிஷ் பாண்டே, மயங்க் அகர்வால், கேதர் ஜாதவ், இஷாங் ஜக்கி, குர்கீரத் மான், அக்‌ஷர் பட்டேல், அக்‌ஷய் கார்னிவார், அசோக் திண்டா, குல்வந்த், தவால் குல்கர்னி, கோவிந்தா போதர்.

Next Story