காயத்தில் இருந்து மீளாத கோலி; ஸ்ரேயாஸ் அய்யர் அழைப்பு


காயத்தில் இருந்து மீளாத கோலி; ஸ்ரேயாஸ் அய்யர் அழைப்பு
x
தினத்தந்தி 23 March 2017 11:45 PM GMT (Updated: 23 March 2017 7:33 PM GMT)

இந்திய கேப்டன் விராட் கோலி 3-வது டெஸ்டின் போது, ‘பவுண்டரி’ நோக்கி ஓடிய பந்தை பாய்ந்து விழுந்து தடுத்த போது வலது தோள்பட்டையில் காயமடைந்தார்.

ஸ்ரேயாஸ் அய்யர் - விராட் கோலி

அந்த காயம் முழுமையாக சீராகவில்லை. தோள்பட்டையில் போடப்பட்ட ‘பேண்டேஜ்’ இன்னும் அகற்றப்படவில்லை. நேற்று மைதானத்திற்கு வந்த விராட் கோலி பேட்டிங் வலைபயிற்சி எதிலும் ஈடுபடவில்லை. சிறிது நேரம் பந்தை தூக்கி எறிந்து பீல்டிங் பயிற்சி மட்டும் செய்தார்.

அவர் தொடர்ந்து விளையாடும் போது காயத்தன்மை மேலும் மோசமடைந்து விடக்கூடாது என்ற கவலையும் அணி நிர்வாகத்துக்கு உள்ளது. இதை கருத்தில் கொண்டு மும்பையை சேர்ந்த பேட்ஸ்மேன் 22 வயதான ஸ்ரேயாஸ் அய்யர் அணிக்கு கூடுதலாக அழைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய ஏ அணிக்காக களம் இறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 202 ரன்கள் விளாசியது நினைவு கூரத்தக்கது. மாற்று வீரர் அழைக்கப்பட்டிருப்பதால், கடைசி நேரத்தில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

Next Story