மைதானத்தில் இந்திய ரசிகர்களின் இதயங்களை வென்ற வார்னர்


மைதானத்தில் இந்திய ரசிகர்களின் இதயங்களை வென்ற வார்னர்
x
தினத்தந்தி 10 April 2017 8:27 AM GMT (Updated: 10 April 2017 8:27 AM GMT)

மைதானத்தில் இந்திய ரசிகர்களின் இதயங்களை வென்ற வார்னர்: ஐபிஎல் போட்டியில் நடந்த சுவாரஸ்யம்

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியின் பந்து வீச்சாளர் ஷுவை டேவிட் வார்னர் தன் கையில் எடுத்து கொடுத்த சம்பவம் இந்திய ரசிகர்களின் பலரது இதயங்களை வென்றுள்ளது.

நேற்று சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணிக்கும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணிக்கும் ஹைதரபாத்தில் உள்ள ராஜிவ்காந்தி மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியின் 9-வது ஓவரின் கடைசி பந்தை ஹென்ரிக்ஸ் அடித்தார். அதை பந்துவீச்சாளர் தாம்பி தடுக்க முயற்சித்த போது, அவரது ஷூ கழன்று விழுந்தது.

இதை ஓட்டம் எடுக்க ஓடிய வார்னர் ஷுவை தன்னுடைய கையில் எடுத்து அவரது கையில் கொடுத்துவிட்டு ஓடினார். இதை மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ரசித்தனர்.



Next Story