டிவிட்டரில் ஜடேஜாவை கடுமையாக விமர்சனம் செய்த ஹர்திக் பாண்டயா


டிவிட்டரில் ஜடேஜாவை கடுமையாக விமர்சனம் செய்த ஹர்திக் பாண்டயா
x
தினத்தந்தி 20 Jun 2017 8:16 AM GMT (Updated: 20 Jun 2017 8:16 AM GMT)

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரன் அவுட் விவகாரத்தில் டிவிட்டரில் ஜடேஜாவை கடுமையாக விமர்சனம் செய்தார் ஹர்திக் பாண்டயா.

பாகிஸ்தானுக்கு எதிராக போட்டியில் ஹர்திக் பாண்டயாவிற்காக ஜடேஜா ரன்அவுட் ஆகி, அவரை விளையாட அனுமதித்திருக்க வேண்டும் என சங்ககாரா கூறியுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. 339 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

முன்னணி வீரர்கள் சீட்டுக்கட்டு போல் சரிய இந்தியா 72 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து திணறியது.

7-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டயா உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். ஹர்திக் பாண்டயா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 43 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 76 ஓட்டங்கள் குவித்த நிலையில் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார்.

ஆட்டம் சூடுபிடித்திருந்த நிலையில் ஜடேஜா பந்தை ஆஃப் சைடு அடித்தார். எதிர்முனையில் இருந்த ஹர்திக் பாண்டயா விரைவாக ஓடி வந்துவிட்டார்.

இந்த குழப்பத்தில் பாண்டயா அவுட் ஆனார். இந்திய வீரர்கள் யாரும் இதை விரும்பவில்லை. மேலும், ஜடேஜா அடுத்த ஓவரில் ஆட்டம் இழந்தார்.

இதுகுறித்து இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் கூறுகையில், இந்த ரன்அவுட் இந்தியா விரும்பவில்லை. ஜடேஜா இந்த ரன்அவுட்டில் ஒரு வீரர் போன்று செயல்பட்டிருக்கலாம். அவர் ஹர்திக் பாண்டயாவிற்காக தனது விக்கெட்டை விட்டுக் கொடுத்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த விவிஎஸ் லட்சுமணன், தான் ஜடேஜா இடத்தில் இருந்திருந்தால் பாண்டயாவுக்காக விக்கெட்டை தியாகம் செய்திருப்பேன் என கூறினார்.

பிரபலங்கள் பலரும் ஜடேஜா செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், சம்மந்தப்பட்ட பாண்டயாவும் கடுப்பாகியுள்ளார். அவுட்டாகி மைதானத்தை விட்டு வெளியேறும்போது அவர் தனது கோபத்தை முகத்தில் காட்டியிருந்தார்.

இந்தநிலையில் டிவிட்டரில் பாண்டயா, ஜடேஜாவை கடுமையாக விமர்சனம் செய்து ஒரு டிவிட் போட்டிருந்தார். ஆனால், இந்திய அணிக்குள் பிளவு இருப்பதை போல இந்த டிவிட் காட்டுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தநிலையில் அதை டெலிட் செய்துள்ளார் பாண்டயா.

தனது டிவிட்டில், நம்மில் ஒருவராலேயே நாம் கொள்ளையடிக்கப்பட்டோம். பிறகு அடுத்தவர்களை குறை சொல்லி என்ன பயன் என்று பொருள்படும் வகையில் இந்தியில் கூறியிருந்தார். அதைத்தான் இப்போது டெலிட் செய்துவிட்டார். ஆனால் டிவிட்டின் ஸ்கிரீன் ஷாட்டுகள் நெட்டில் வட்டமிடுகின்றன.

Next Story